• Sep 20 2024

இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட பிரபல நடிகை கைது.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஈரான் நாட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தாரனே அலிதூஸ்டி. அதாவது 38 வயதான நடிகை தாரனே அலிதூஸ்டி 2016-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற தி சேல்ஸ்மேன் திரைப்படத்தில் நடித்தன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.


இந்நிலையில் சமீபகாலமாக மாஷா மீதான வன்முறையை கண்டித்து ஈரான் முழுவதும் பல பெண்கள் கட்டாய ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தலைமுடியை வெட்டியும் அவர்கள் போராடி வருகின்றனர்.


மேலும் செப்டம்பர் 20-ஆம் தேதி தெஹ்ரானில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தில் போது 17 வயது சிறுமி நிகா ஷகராமி மர்மமான முறையில் காணாமல் போனார். சில நாட்களுக்குப் பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சிறுமியின் மரணத்துக்குக் காரணம், அங்கிருந்த மதகும்பல் தான் என்று ஈரானிய அரசு தரப்பிலும், பாதுகாப்புப்படையினர் தான் காரணம் என்று போராட்டக்காரர்களும் கூறி வருகின்றனர். 


இதனைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு சிறுமியின் மரணம் இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில் தான் ஈரான் நாட்டின் பிரபல நடிகையான தாரனே அலிதூஸ்டி நாட்டை பற்றி பொய்யான தகவலை பரப்பியதற்கான நேற்று ஈரான் போலீசார் அவரை கைது செய்தனர். 


அதாவது இவர் கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில் இந்த இரத்தக்களரியை பார்த்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு சர்வதேச அமைப்பும் மனிதகுலத்திற்கு பெரிய அவமானம் என்று எழுதினார். 

இதுகுறித்து மாநில செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ இதற்குரிய ஆவணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. ஆனால் தாரனே அலிதூஸ்டி ஆவணங்களை வழங்கத் தவறியதால், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாது எட்டு மில்லியன் பாலோவர்களை கொண்ட இவரது இன்ஸ்டாகிராம் கணக்கையும் போலீசார் முடக்கி உள்ளனர். இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement