• Sep 20 2024

ரூ.200 கோடியை மோசடி செய்த நபருடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்ட பிரபல நடிகை- தீவிர விசாரணையில் போலீஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஜாக்குலின். இவருடைய ரூ.7 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

அதாவது டெல்லி திகார் சிறையில் இருந்தபடி மருந்து நிறுவன அதிபர் குடும்பத்திடம் ரூ.200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்துள்ளார். இதனால் இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு இந்தப் பணத்தில் பரிசுப் பொருட்கள் வழங்கியதாகக் கூறினார்.

இதனால் நடிகை ஜாக்குலினுக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதோடு தீவிர விசாரணையையும் நடாத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் பல முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த ஜூன் மாதம் சுகேஷை முதன் முதலில் சந்தித்ததாகவும், அவர் தனக்கு நிறைய பரிசுகள் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பயணத்திற்காக பல முறை தனி விமானங்கள் , ஹெலிகாப்டர்களை அவர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் பலகோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் மற்றும் நகைகளையும் சுகேஷ் கொடுத்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தத் தகவலை கேட்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு ஜாக்குலினை கடுமையாக விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement