இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இப்படம் பாலிவூட்டில் மட்டுமல்லாது ஏனைய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முதல் பாகத்தில் சமந்தா நடனத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோல ஒரு பாடல் உள்ளதாகவும், அந்த பாடலில் பாலிவூட் நடிகை மலைகா அரோரா நடனமாட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Listen News!