• Sep 20 2024

வயோதிப தோற்றத்திற்கு மாறிய பிரபாஸ்... இவருக்கு என்ன ஆச்சு... ஏன் இப்படி மாறிட்டாரு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் 2002-ஆம் ஆண்டு வெளியான 'ஈஸ்வர்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் பிரபாஸ், எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் பலரும் வியக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானார்.


இவர் நடிப்பில் உருவான பாகுபலி சீரிஸ் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி இருந்தது. இதனால் தமிழ் சினிமா நடிகர்கள் மட்டுமன்றி பாலிவுட் நடிகர்கள் கூட மிரண்டு போயினர். அதுமட்டுமல்லாது பாகுபலி படத்தின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த தனது படங்களுக்கு சம்பளத்தை 100 கோடிகளாக உயர்த்தினார் பிரபாஸ்.

இந்தவகையில் இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனினும் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ரசிகர்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது பிரபாஸின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாகுபலி படத்தில் செம ஃபிட்டாக இளம் லுக்கில் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது, முகம் முழுவதும் மாறி வயதானவர் போன்ற ஒரு தோற்றத்திற்கு மாறியுள்ளார். 


இந்த புகைப்படத்தை பார்த்த பிரபாஸின் ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். அதுமட்டுமல்லாது "உங்களுக்கு என்ன ஆச்சு, எதற்காக இப்படி மாறிவிட்டீங்க" என சமூக வலைத்தளங்களின் மூலமாக தமது கேள்விக் கணைகளைத் தொடுத்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement