இந்திய திரையுலகில் நடிகர் டான் மாஸ்டர் இயக்குநர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பிரபுதேவா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய மூன்று மகன்கள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய முதல் மனைவியை பிரிந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். குழந்தை பிறந்தும் அந்த தகவலை வெளிவிடாமல் இருந்து வந்த நிலையில் இருவரும் திருப்பதி சென்று வந்தனர்.
தங்களது முதல் வம்ச பெண் குழந்தை பிறந்ததனால் ஏழுமலையானுக்கு நன்றி சொல்லவே இவர்கள் சாமி தரிசனம் செய்வதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!