பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில் சமீபத்தில் இதன் 7-ஆவது சீசன் ஆரம்பித்துள்ளது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம், சண்டை சச்சரவு என நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே போகின்றது.
அந்தவகையில் இந்தவார டாஸ்க்காக 'பாப்புலாரிட்டி டாஸ்க்' கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பேசுகையில் பிரதீப் ஆண்டனி தனக்குள்ள மனநோய் இருப்பது குறித்து ஓப்பனாக தெரிவித்துள்ளார். அந்தவகையில் பிரதீப் கூறுகையில் "பிக்பாஸுக்கு வரும் முன் எனது சோசியல் மீடியா பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டு தான் வந்தேன்" என்றார்.
மேலும் "ஏனெனில் எனக்கு ஓசிடி இருப்பதால் எனக்கு வரும் request களை decline கொடுத்தால் தான் நிம்மதியாக என்னால் இருக்கும்" எனவும் கூறியுள்ளார். எனவே ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதுமட்டுமின்றி அதுகுறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்து போகின்ற ஓசிடி எனும் மனநோய் பிரதீப்பிற்கும் இருப்பது இதன் மூலமாக தெரியவந்துள்ளது.
Listen News!