தென்னிந்திய சினிமாத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 'என்னவளே' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனவும் பெயர் எடுத்தார்.
மேலும் 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அந்த நட்பு காதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் சினேகா-பிரசன்னா இருவரும் பிரியப் போவதாக ஒரு வதந்தி பரவிய வண்ணமே இருக்கின்றது. அதாவது 10 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் பிரிந்து விட்டதாக சினேகா - பிரசன்னா முடிவெடுத்துள்ளதாகவும் அந்த செய்திகள் பரவி இருந்தன.
குறிப்பிட்ட சில தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த செய்தி படு வைரலாக இதற்கு பதிலடி கொடுக்கும் படி சினேகா கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இதையும் நம்பாத சில ஊடகங்கள் மீண்டும் மீண்டும் அந்த விவாகரத்து செய்தியை கொளுத்தி போட்டு வந்தது.
இதனால் சமீபத்தில் பிரசன்னாவும் ஒரு பதிவின் வாயிலாக இதற்கு பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். அதாவது "சினேகாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, முழுமுற்றும் புரளியே! இறையருளால் மகிழ்வான இல்வாழ்வும் முத்தான மக்களும் பெற்று இணைந்திருக்கிறோம். இணைந்தேயிருப்போம்..." என்று அப்பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
Listen News!