• Sep 21 2024

குடும்பத்தின் கூட்டு முயற்சியால் கையும் களவுமாக பிடிபட்ட பிரசாந்த்- கடும் கோபத்தில் அடித்த மூர்த்தி- Pandian Stores Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மீனா மூர்த்தி வீட்டிற்குச் சென்று எல்லா உண்மையையும் சொன்னதால், மூர்த்தி எப்படியாவது பிரசாந்த் பற்றிய உண்மையை வெளியில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்து குடும்பத்துடன் சேர்ந்து பிளான் போடுகின்றார். இதனால் எல்லோரும் சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்குப் போகின்றனர். அப்போது மூர்த்தி முதலில் உங்க அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டுக்கு அனுப்பி வையுங்க என்று சொல்கின்றார்.


இதனால் மீனாவும் தன்னுடைய அம்மா மற்றும் தங்கச்சி யயிடம் சென்று வீட்டுக்கு போங்க நான் அப்பா கூட இருக்கிறேன் என்று சொல்ல, மீனாவின் தங்கச்சி ஏதாவது பிரச்சினயா அக்கா பிரசாந்த் இரண்டு தடவை உள்ளே போக வந்தாரு ஆனால் நான் விடவே இல்லை என்கின்றார். இப்படி இவர்கள் பேசிட்டு இருக்கும் போது பிரசாந்த் வருகின்றார்.

நான் மாமாவை பார்த்துக்கிறேன் நீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்ல, மீனாவும் கிளம்பி போவது போல போய் தன்னுடைய அம்மாயும் தங்கச்சியையும் அனுப்பி வைத்து விடுகின்றார். இதனை அடுத்து ஐஸ்வர்யா வீடியோ எடுப்பதற்காக போனை உள்ளே கொண்டு போய் வைக்கின்றார். பின்னர் மூர்த்தி, முல்லையின் அப்பா, கண்ணன் எல்லோரும் மறைந்து நின்று பார்க்கின்றனர்.


அப்போது பிரசாந்த் யாருக்கும் தெரியாமல் உள்ளே போய்ட்டு வருகின்றார். பிரசாந்த் உள்ளே போய் மாமனாரைக் கொல்லப்போவதாக பேசி வயர் எல்லாவற்றையும் கழட்டுகின்றார். பிரசாந்த் பேசுவது வீடியோ எடுப்பது எல்லாம் ரெக்காட் ஆவது கூட தெரியாமல் வயரைக் கழட்டப்போக எல்லோரும் வந்து பிடிக்கின்றனர். அத்தோடு பிரசாந்தை இழுத்துக் கொண்டு போகின்றனர். இத்துடன் இன்றைய எப்பஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement