• Sep 20 2024

பிரசாந்தால் உயிருக்கு போராடும் ஜனார்த்தனன்- ஜீவாவை அரஸ் பண்ணிய போலீஸார்- அதிர்ச்சியில் மீனா-Pandian Stores Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ஜனார்த்தனனின் பணத்தை பிஸ்னஸ் செய்வதாக ஏமாற்றி பிரசாந்த் வாங்கி விட்டார். இதனால் பிரசாந்திடம் பணத்தை தரும்படி ஜனார்த்தனன் கேட்கின்றார். அதற்கு பிரசாந்த் பணத்தை தரமுடியாது என்று சொல்லி மாமனாரைத் தள்ளி விடுகின்றார்.

அப்போது இதனால் ஜனார்தனுடன் பக்கத்தில் நின்றவர் கல்லில் அடிபட்டு இறந்து விடுகின்றார். தொடர்ந்து ஜனார்த்தனுக்கும் பிரசாந்துக்கும் இடையில் நடந்த சண்டையில் பிரசாந்த் ஜனார்த்தனை கத்தியில் குத்தி விடுகின்றார்.பின்னர் தனக்கு தானே குத்திக் கொண்டு ஜீவாவையும் கதிரையும் சாட்டி விடுகின்றார்.

இதனால் ஜீவாவையும் கதிரையும் போலீஸ் அரஸ் பண்ணுகின்றார். அப்போது ஜீவா மீனாவிடம் தான் எதுவும் பண்ணல என்று கூறிக் கொண்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement