• Sep 20 2024

பிரதாப் போத்தன் இறுதியாக என்னுடைய படத்தில் தான் நடித்தார் - நடிகை குஷ்புவின் இரங்கல் பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவில் திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகராகவும் வலம் வந்தவர் தான் பிரதாப் போத்தன்.நடிகை ராதிகா தயாரித்த மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் வயது முதிர்வு காரணமாக சென்னையில் உள்ள தனது ஃபிளாட்டில் மரணித்தார்.இவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகை குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் அவர் பதிவிட்டிருப்பதாவது மிகவும் அதிர்ச்சியான செய்தி இது, நல்ல நண்பரை இழந்து விட்டேன். மிகவும் நல்ல மனிதர் மற்றும் ஜாலியான நபர். அவரை இழந்து வாடுவது ரொம்பவே வருத்தமளிக்கிறது. தற்போதாவது அவர் ஆன்மா நிம்மதி அடையட்டும் என உருக்காமான பதிவை போட்டு இருக்கிறார்

மேலும் குஷ்பு தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா, சம்யுக்தா, பிக் பாஸ் ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் காபி வித் காதல் படத்திலும் பிரதாப் போத்தன் சிறப்பான கதாபாத்திரத்தில் அவருக்கே உரித்தான அதே சிரிப்புடன் நடித்துள்ளார் என்கிற தகவலையும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement