• Sep 21 2024

பிரதாப் போத்தனுக்கு ஒரே ஒரு மகள் தானாம்-அவர் என்ன செய்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் சினிமாவில் நடிப்பைத் தாண்டி இயக்கத்திலும் வெற்றி கண்டவர். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்.

இவரின் மறைவு திரைதுறையையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

திரையுலகில் உச்சம் தொட்ட அவரின் குடும்ப வாழ்க்கை அந்தளவுக்கு மெச்சும்படியாக இல்லை என்று தான் கூற வேண்டும். பிரதாப் நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் டுஇருவரும் பிரிந்துவிட்டனர்

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை 1990 செய்துகொண்டார். ஆனால், அவரையும் திருமணமான 22 ஆண்டுகளில் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

மேலும் இந்த தம்பதிக்கு கேயா என்ற மகளும் இருக்கிறார். அவரும் இவரை விட்டுவிட்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டாம் மனைவியை பிரிந்த போதிலும் தன் மகளை பாசமாக பார்த்து வந்தார் பிரதாப் போத்தன்.

அத்தோடு , அவரது மகள் கேயாவும் கலைத்துறையில் ஆர்வமிக்கவர். இவர் பாடல்களை எழுதி பாடுவதோடு ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகின்றார்.

கேயா தனது சமூகவலைதள பக்கத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement