விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்ருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம்.மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் காதலை மையமாக வைத்தே ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யாவைப் பெண் பார்ப்பதற்காக வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கின்றனர்.
அப்போது ஐஸ்வர்யா திடீரென மயங்கி விழ மாப்பிள்ளை கையைப் பிடித்து பார்க்கின்றார். அப்போது ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக சொல்லி விடுவதோடு இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று சொல்கின்றனர்.
இதைக் கேட்டு கோடீஸ்வரி பேரதிர்ச்சியில் உறைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!