• Sep 21 2024

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்ததால் கர்ப்பமான பெண்-வெங்கடேஷ் பட் பகிர்ந்த விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் நடுவர்களாக செப் தாமு மற்றும் செப் வெங்கேடஸ் பட் ஆகிய இருவரும் மூன்று சீசன்களாக இருந்து வருகிறார்கள்.

அத்தோடு முதல் இரண்டு சீசனை விட இதற்கு கொஞ்சம் அதிக பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்றே கூறலாம்.

இந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் ஒரு விஷயம் தெரிவித்துள்ளார். அதில் என்னை வெளியே எத்தனை மக்கள் சந்தித்து நிகழ்ச்சி குறித்து சந்தோஷமாக பேசுகிறார்கள்.

அதில் ஒருவர் சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு பெண் இந்நிகழ்ச்சி பார்த்து கர்ப்பமானதாக கூறினார். அதாவது இது அவ்வளவு ஜாலியாக டென்ஷனை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதைக் கேட்ட ரசிகர்கள் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி கண்டிப்பாக Stress Buster தான் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement