கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் வெங்கட பிரபு. இப்படம் இவரக்கு நல்லதொரு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இப்படம் வெங்கட்பிரபுவிற்கு மட்டுமின்றி நடிகர் ஜெய், சிவா போன்ற பலருக்கும் முக்கியமான படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். இருந்தாலும் இப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதாக வரவெற்பைப் பெறவில்லை. இதனை அடுத்து இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது என்றால் மங்காத்தா திரைப்படம்தான்.
அஜித் நடிப்பில் கடந்த 2011 இல் வந்த மங்காத்தா திரைப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.அதன் பிறகு 2021 இல் வெளிவந்த மாநாடு திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
நடிகர் ப்ரேம்ஜி வெங்கட்பிரபுவின் தம்பியாவார். எனவே வெங்கட் பிரபு அவரது அனைத்து படங்களிலும் ப்ரேம்ஜிக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்துவிடுவார். அந்த வகையில் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் ப்ரேம் ஜி கல்லூரி காலங்களில் செய்த அட்டகாசம் குறித்து வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
ப்ரேம் ஜிக்கு சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் இருந்துள்ளது. எனவே அவரை வெளிநாட்டில் உள்ள இசை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கலாம் என நினைத்துள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் வெளிநாடு சென்ற ப்ரேம் ஜி அங்கு இசையை கற்றுகொள்ளாமல் ஊர் சுற்றிக்கொண்டு ஜாலி செய்து கொண்டிருந்திருக்கிறார். இது தெரியாமல் வருடா வருடம் பணம் அனுப்பி வந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
Listen News!