• Sep 20 2024

பாடகர் கே.கே யின் மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த பிரதமர் மோடி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் கே கே தனது 53 வயதில் நேற்றைய தினம் திடீர் என்று காலமானார். இவருடைய அகால மரணம்
திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பதிவில் "கே கே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அவரது பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்ததால் பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தது.

அவரை எப்போதும் நினைவில் கொள்வோம் அவரது பாடல்கள் மூலம் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள் ஓம் சாந்தி என்று மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல யூனியன் மினிஸ்டர் மற்றும் ஏசியா நெட்வொர்க்கின் எம்.டியுமான ராஜீவ் சந்திரசேகர், ன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் "கே கே" என்று அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் "ஒம் சாந்தி" என குறிப்பிடுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement