மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குநர் சச்சிதானந்தம். இவர் 2015ம் ஆண்டு பிருத்விராஜ் நடிப்பில் வெளியான அனார்கலி படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் பிருத்விராஜ் உடன் இணைந்து அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றியால் தெலுங்கு பாலிவூட் ஆகிய மொழிகளிலும் இப்படங்களை ரீமேக் செய்திருந்தனர்.தமிழிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே இப்படத்தின் இயக்குநரான சச்சிதானந்தம் தனது 47 வயதில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.
இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. பிருத்விராஜ், பிஜு மேனன் எல்லாம் அந்த செய்தி அறிந்ததுமே அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது இறுதி சடங்கிலும் பங்கேற்றனர்.
ஜூன் 18, 2020ம் ஆண்டு சச்சி உயிரிழந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. மலையாள திரை உலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவரை நினைத்து அவரது நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அய்யப்பனும் கோஷியும் மாதிரி இன்னும் பல படங்களை கொடுத்திருக்க வேண்டிய கலை பொக்கிஷம் நம்மை விட்டு சீக்கிரத்திலேயே பிரிந்து விட்டதே என மனம் வாடி வருகின்றனர்.
இயக்குநர் சச்சி இயக்கிய இரு படங்களிலும் ஹீரோவாக நடித்த பிருத்விராஜ் உடைந்த இதயத்தின் எமோஜியை பதிவிட்டு அய்யப்பனும் கோஷியும் படப்பிடிப்பின் போது சச்சி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பிக்பாஸ் சீசன் 6 பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்-அட சூப்பர் அப்டேட்டாக இருக்கே
- “மை ஹீரோ ,மை பிரண்ட்“ கமலை கட்டியணைத்த படி குஷ்பூ வெளியிட்ட கியூட் புகைப்படம்
- சொந்த ஊருக்கு தனது கணவனுடன் சென்ற நயன்தாரா-யாரோட இருவரும் நிற்கிறாங்க என்று பாருங்க
- மர்மமான முறையில் இறந்த ஹாலிவுட்டின் 18 வயது இளம் நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!