தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ப்ரியா பவானி ஷங்கர். இவர் விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்த நிலையில் அதற்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு கடைக்குட்டி சிங்கம் தொடங்கி தற்போது சமீபத்தில் ரிலீஸ் ஆன ஹாஸ்டல் படம் வரை தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
தற்பொழுது விஷால் ,ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது நெட்டிசன் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை என ட்ரோல் செய்து இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்து ட்விட் செய்து உள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.
"அதை என் இயக்குநர்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொண்டு அதை பற்றி எதாவது செய்வேன், நீங்க பதட்டபடாதீங்க. சில்" என ட்விட் செய்து இருக்கிறார். இவரின் இந்த பாசிட்டிவ் எனர்ஜிக்கு ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!