தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் கடைசியாக வெளிவந்த ஹரி இயக்கிய 'யானை' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த இவரது ரோல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான பாராட்டுகளை பெற்றது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகவும் குறுகிய காலத்தில் டாப் டென் இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல்' வரை தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதுகளைப் பெற்ற பிரியா அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவின் 'மான்ஸ்டர்' படத்தில் நாயகியானார். பின்னர் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தும் பட்டையை கிளப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'டைம் என்ன பாஸ்' வெப் தொடரில் நடித்துள்ள பிரியா பின்னர் ஜீவா மற்றும் அருள்நிதியுடன் 'களத்தில் சந்திப்போம்' என்ற படத்திலும் தோன்றியிருந்தார். இவ்வாறாக பல படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற இவர் தற்போது மீண்டும் எஸ் ஏ சூர்யாவுடன் 'பொம்மை', அசோக் செல்வனுக்கு ஜோடியாக 'ஹாஸ்டல்', ஜெயம் ரவி உடன் 'அகிலன்' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது இவர் நாயகியாக நடித்துள்ள தனுஷின் 'திருச்சிற்றம்பலம்', சிம்புவின் '10 தல', உலக நாயகனின் 'இந்தியன் 2' உள்ளிட்ட படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. படப்பிடிப்பிற்கு இடையே விடுமுறைக்காக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
அப்புகைப்படங்களில் இவரின் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. பிரியா முன்னதாக குட்டை உடை, ஜீன்ஸ் என்பன அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்நிலையில் தற்போது பிரியா பவானி சங்கர் தனது உடையை குறைத்துக் கொண்டு குட்டை கவுணில் கவர்ச்சி போஸ்களை அள்ளி வீசி வருகிறார். அந்தவகையில் இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Listen News!