• Sep 20 2024

இந்த மூன்றும் இல்லை என்றால் பிரியங்கா மோகன் உயிர் வாழவே மாட்டங்களாம்.... அதில இதுவும் ஒண்ணா... என்ன பொண்ணும்மா நீங்க..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்திருக்கின்றார்.



அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய 'டாக்டர்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்திருக்கின்றார். அத்தோடு சூர்யாவுடன் இணைந்து 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.



அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் 'டான்' என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்த நடிகைகளில் தற்போது பிரியங்காவும் இடம்பிடித்துள்ளார்.



இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா மோகன் பேசிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. அதாவது அப்பேட்டியில் "உங்களால் எந்த மூன்று விஷயம் இல்லை என்றால் உயிர் வாழ் முடியாது" என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.


இதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன் "சாப்பாடு, தண்ணீர் மற்றும் போன் ஆகிய மூன்றும் இல்லையென்றால் என்னால் உயிர் வாழ முடியாது " என்று கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறிய இந்த விடயமானது அவரின் ரசிகர்களிடம் வெகுவிரைவில் வைரலாகி விட்டது. ஏனெனில் இவர் அத்தியாவசிய தேவையான சாப்பாடு, தண்ணீர் என்பவற்றுடன் போனையும் இணைத்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement