• Sep 20 2024

தனிமையில் இனிமை காணும் பிரியங்கா மோகனன்..! அதுவும் நவநாகரிக உடையிலா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியங்கா மோகனன். எனினும் இவர் தெலுங்கில் 'கேங் லீடர்' என்ற படத்தின் மூலமாகவே அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து 'எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'டான்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தற்போது பிரபல முன்னணித் தமிழ் ஹீரோவான ஜெயம் ரவியுடனும் ஜோடி சேர உள்ளார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் தற்போது நடிப்பில் களை கட்டி வரினும் பிரியங்கா திரைக்கு அறிமுகமானது 'ஒந்த் கதே ஹெல்லா' என்ற கன்னட படத்தில் தான் மூலமாகத் தான்.

படங்களில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகனன் அவ்வப்போது கவர்ச்சியான தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டவர்.

இவரது புகைப்படங்களை ரசிப்பதற்கென்றே தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் இவருக்கு உண்டு. அதுமட்டுமல்லாது நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் என்ற நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் உட்படப் பல சமூக வலைதள பக்கங்களை கவனித்துக் கொள்கிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகனன் தற்போது இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ள 'Hyde Park Corner' என்ற பூங்காவில் தனியாக உட்கார்ந்திருந்து எடுத்த தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனியாக புல் தரையில் அமர்ந்து நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் காட்சியளிக்கிறார் நம்ம பிரியங்கா மோகனன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement