ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். பிடிக்காத திருமணத்தை சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்து அடிக்கடி மோதலில் ஏற்பட்டு வரும் கதாநாயகன் கதாநாயகி குறித்தே ஒளிபரப்பாகி வருகின்றது.
அந்த வகையில் இதில் கதாநாயகியாக நடித்த வந்தவர் தான் ப்ரியங்கா நல்காரி. இவர் இதற்கு முதல் சன்டிவியில் ஒளிபரப்பாகிய ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர்.
அந்த சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்தே இந்த சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கென்றும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இப்படியான நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இவரது கணவர் மலேசியாவில் தான் இருக்கின்றார். இவர் ஷுட்டிங்கிற்காக மலேசியாவில் இருந்து தான் வந்து போகின்றாராம். எனவே இவருடைய கணவர் நானே நன்றாகத் தான் சம்பாதிக்கிறேன். நீ எதுக்கு கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருக்கனும் சீரியலில் இருந்து விலகுமாறு கேட்டுள்ளாராம். எனவே கணவரின் விருப்பத்திற்காகத் தான் இவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!