ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், கார்த்திகை தீபம், அமுதாவும் அன்ன லக்ஷ்மியும், தவமாய் தவமிருந்து போன்ற சீரியல்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் புதிய சீரியல் ஒன்று மிகப் பிரபலமான சின்னத்திரை, பெரியதிரை நடிகைகளுடன் விரைவில் ஔிபரப்பாக இருக்கின்றது.
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கின்றது. இத் தொடரில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியும், ஹீரோவாக நந்தாவும் நடிக்க நடிக்கின்றார்கள் இத் தொடரில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இத் தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சுமார் 6 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அம்மனாக என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த புரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் வரேவேற்பை பெற்றிருக்கின்றது.
நள தமயந்தி தொடரில் பிரியங்கா நல்காரி தன்னுடைய அம்மாவின் நினைவாக, பலரது பசியை போக்க உணவகம் நடத்தி வருகின்றார். நளதமயந்தி வாழ்க்கையில் வில்லனாக வரும் ஹீரோ கணவனாக மாறுகிறார். அவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்னென்ன சம்பவங்கள் அரங்கேறும் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கின்றது.
சாதாரண மெஸ் நடாத்தும் பெண்ணாக வலம் வரும் நளதமயந்தியின் வாழ்வில் என்ன நடக்கின்றது, என பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!