லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. லியோ படம் பற்றி எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் லோகேஷ் மிகவும் கவனமாக இருக்கிறார்.
மேலும் படக்குழுவை சேர்ந்த யாரும் எதுவும் வெளியே சொல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் சூப்பரான அப்டேட் கொடுத்திருக்கிறார்.
லியோவை பான் இந்திய படமாக உருவாக்க வேண்டும் என்று கூறியபோது அதெல்லாம் தேவை இல்லாதது, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக மட்டும் எடுத்தால் போதும் என்றாராம் விஜய்.
ஆனால் லலித் குமாரும், ஜெதீஷும் வலியுறுத்திய பிறகு ஓகே என்று சொல்லியிருக்கிறார்.இதையடுத்து லியோ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. லியோ அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என லலித் குமார் தெரிவித்துள்ளார்.
லியோ பற்றி ஏதாவது அப்டேட் கிடைத்துவிடாதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இந்த தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விஜய்.என் பட விழாக்கள் நேரு உள்விளையாட்டரங்கில் தான் நடந்து வருகிறது. தென் தமிழகத்தில் இருக்கும் என் ரசிகர்களை சந்திக்க விரும்புகிறேன். அதனால் லியோ விழாவை தென் தமிழ்நாட்டில் நடத்தலாம் என்றாராம்.
இந்த தகவலையும் லலித் குமார் தான் வெளியிட்டார். லியோ இசை வெளியீட்டு விழா மதுரை, திருச்சி அல்லது கோவையில் நடக்குமாம்.இதற்கிடையே லியோ படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் த்ரிஷா.
Listen News!