எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம்.
அந்தவகையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் எனப் பலரும் நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதனையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. அந்தவகையில் முதல் 4 நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், 4 நாட்களுக்கு பின் வசூல் படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்து தற்போது 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து விடயம் தெரியவந்துள்ளது. அந்தவகையில் உலகளவில் இப்படம் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாது தமிழகத்தில் ரூ. 115 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஆகவே முதல் பாகத்தின் ரூ. 500 கோடி வசூல் சாதனையை இப்படம் முறியடிக்க எந்த விதத்திலும் வாய்ப்பில்லை எனப் பலரும் கூறி வருகின்றனர்.
Listen News!