• Sep 20 2024

கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டு பிடித்த பாரதி- ஊர் மக்களால் கிடைத்த தண்டனை- லக்ஷ்மி எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது ஜெயிலில் இருக்கும் வெண்பா கண்ணம்மா தன்னிடம் வந்து வெறுப்பேற்றி பேசுவதாக நினைத்து சக கைதியை அடித்து கழுத்தைப் பிடித்து நசிக்கின்றார். இதனால் அங்கே வரும் போலீஸ் அதிகாரிகள் வெண்பாவை வார்னிங் செய்கின்றனர்.


அதன் பின்னர் கண்ணம்மாவும் பிள்ளைகளும் தாமரை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது லக்ஷ்மி டாக்டர் எங்களைத் தேடி வருவாரா என்று கண்ணம்மாவிடம் கேட்க கண்ணம்மாவின் அப்பா லக்ஷ்மியிடம் உங்க அப்பா அவங்க வரமாட்டார் என்று கூறுகின்றார்.

இதனால் கோபமான லக்ஷ்மி அவரை எங்க அப்பா என்று சொல்லாதீங்க டாக்டர் என்று சொல்லுங்க என கூறுகின்றார். பின்னர் அவரை ஒரு மாதிரியாக அனைவரும் சமாதானம் செய்கின்றனர்.அதன் பின்னர் கண்ணம்மா இருக்கும் ஊருக்கு பாரதி ஒரு மாதிரியாக வந்து சேர்கின்றார்.இதன் பின்னர் அந்த வழியாக வரும் கண்ணம்மாவை பாரதி கண்டு விடுகின்றார்.


பின்னர் கண்ணம்மா நான் இங்க இருக்கிறேன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கோபப்பட பாரதி கண்ணம்மாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து தன்னோடு வீட்டுக்கு வரும் படி அழைக்கின்றார்.பின்னர் பாரதி கண்ணம்மாவின் கையைப் பிடித்து விடாமல் இருக்க ஊர்க்காரர் எல்லோரும் வந்து நியாயம் கேட்கின்றனர்.தொடர்ந்து பஞ்சாயத்துக் கூடி பாரதியைத் திட்டுகின்றனர்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement