விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் எலிமினேசன் ஆவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஜனனி, மைனா நந்தினி, குயின்ஸி ஆகிய மூவருக்கும் மூன்று பெட்டிகள் கொடுக்கப்பட்டு, மூன்று சாவிகள் கொடுக்கப்பட்டன. மூவரில் யாரேனும் ஒருவரது பெயர், திறக்கப்படும் அந்த பெட்டியில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் மூன்று பெட்டியும் திறக்காமல் போனதால் எலிமினேசன் இல்லை என்று கருதிய போட்டியாளர்கள் முதலில் மகிழ்ச்சி அடைந்தனர்.பின்னர் கமல் குறுக்கிட்டு விக்ரமனை பெட்டியை திறக்க வைத்தார். அதில் குயின்ஸியின் பெயர் இருந்தது. இதனால் குயின்ஸி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக எலிமினேட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!