விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி. இந்த தொடரில் இதில் முதலில் செந்தில்-ஸ்ரீஜா நடிக்க செம ஹிட்டடிக்க அதே பெயரில் அடுத்தடுத்த சீசன்கள் வந்தன.
அப்படி வந்த தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரச்சிதா. 'சரவணன் மீனாட்சி' சீரியலைத் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ரச்சிதா தனது சக நடிகரான தினேஷைத் தான் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் தொடர்ந்து நடித்துவந்த அவர் ஜீ தமிழ் பக்கமும் சென்றார், அங்கேயும் தனது கணவருடன் இணைந்து நடித்தார். இருப்பினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் தமிழ் பிக்பாஸ் சீசன் 6இலும் கலந்து கொண்டிருந்தார் ரச்சிதா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
அதுமட்டுமல்லாது விவாகரத்து பெற்ற ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் எனவும் தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார் ரச்சிதா. அதாவது "இது முழுக்க முழுக்க வதந்தி ராபர்ட் மாஸ்டர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே" என விளக்கம் அளித்து பரவிய தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரச்சிதா.
Listen News!