சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் ரச்சிதா. அதிலும் சரவணன் மீனாட்சி தொடரில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் மீனாட்சியாகவே மாறிவிட்டார். அதனை அடுத்து பல சீரியல்களில் கமிட்டாகி நடித்தும் வருகின்றார்.
இவர் சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் தனது கணவரை விட்டுப் பிரிந்தார்.கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். கடந்த வாரம் நடிகை ரச்சிதா திடீரென மாங்காடு காவல்நிலையத்திற்கு நள்ளிரவில் சென்று தன்னுடைய கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில் தினேஷ் தனது ஆபாச மெசேஜ் அனுப்பி, மிரட்டுவதாக கூறி இருந்தார்.
இதையடுத்து இதுகுறித்து போலீசார் தினேஷை அழைத்து விசாரணையும் மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் நடிகை ரச்சிதா நாடகமாடியதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி உள்ளார். அதன்படி, மாங்காடு போலீசார் தினேஷை அழைத்து விசாரித்தபோது, அவள் விவாகரத்து கேட்டா நான் கையெழுத்து போட ரெடி என கூறினாராம். பின்னர் சந்தேகத்தின் பேரில் ரச்சிதாவின் செல்போனை போலீசார் பரிசோதனை செய்தார்களாம். அப்போது தினேஷிடம் இருந்து எந்தவித ஆபாச மெசேஜும் வரவில்லையாம்.
இதையடுத்து ரச்சிதாவை அழைத்து இனி இதுபோல் பொய்யான புகார் அளித்தால் கடுமையான ஆக்ஷன் எடுத்துவிடுவேன் என சொன்னதும் பதறிப்போன ரச்சிதா, தன்னுடைய வக்கீல் தான் இவ்வாறு புகார் அளிக்க சொன்னார். இப்படி புகார் அளித்தால் தான் விவாகரத்து கிடைக்கும் என சொன்னார்.
அதனால் தான் அப்படி செய்தேன் என சொன்னாராம். வக்கீல் சொன்னா என்ன வேண்டுமானாலும் செய்வியா என ரச்சிதாவுக்கு செம்ம டோஸ் கொடுத்து அனுப்பினார்களாம் போலீசார். ரச்சிதா குறித்து பயில்வான் கூறியுள்ள இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!