• Sep 20 2024

எதுவும் பேசாமல் கண்ணீர் சிந்தி அழுத வீடியோவைப் பதிவிட்ட ரச்சிதா- ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. இதனை அடுத்து இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது சரவணன் மீனாட்சி சீரியல். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர்,சொல்ல மறந்த கதை போன்ற சீரியல்களில் லீட் ரோலில் நடித்திருக்கின்றார். இது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். மேலும் இவர் தனது காதல் கணவர் தினேஷைப் பிரிந்து வாழ்வதோடு அவரிடம் இருந்து விவாகரத்து பெறவும் முயற்சி செய்து வருகின்றார்.


இந்நிலையில் ரச்சிதா நயன்தாராவின், இதுவும் கடந்து போகும் பாடல் பேக் ரவுண்டில் ஓட, தன்னுடைய மன வேதனை மற்றும் வலிகளை மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் சிந்தி அழுத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்து பதறியபடி ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

  இந்த வீடியோவுடன் அவர் போட்டுள்ள பதிவில், வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக கடந்த வருடங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌன போர்கள், உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டு உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள் பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement