விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி. இந்த தொடரில் இதில் முதலில் செந்தில்-ஸ்ரீஜா நடிக்க செம ஹிட்டடிக்க அதே பெயரில் அடுத்தடுத்த சீசன்கள் வந்தன.
அப்படி வந்த தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரச்சிதா. 'சரவணன் மீனாட்சி' சீரியலைத் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவர் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ரச்சிதா தனது சக நடிகரான தினேஷைத் தான் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் தொடர்ந்து நடித்துவந்த அவர் ஜீ தமிழ் பக்கமும் சென்றார், அங்கேயும் தனது கணவருடன் இணைந்து நடித்தார். இருப்பினும் யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் புதிய கார் வாங்கியதாக புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார் ரச்சிதா. இதனைத் தொடர்ந்து தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Listen News!