விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் அடுத்தடுத்த நாட்களில் யார் வெளியேறுவார்? யார் டைட்டிலை பெறுவார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் இப்போதே யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளதால், முகத்திற்கு நேராக ஒரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளார்கள்.
இதில் கைலைட் என்னவென்றால் ரச்சிதா ராபர்டை நோமினேட் செய்தது தான்.அதாவது அவரின் முன்னிலையிலே அவரை நோமினேட் செய்து விட்டார்.
இதை வச்சு நிறைய ட்ரோல்கள் வந்த நிலையில் ரச்சிதாவின் கணவர் அதை ஷேர் செய்து இருந்தார்.இதைப் பார்க்கும் போது என்னால சிரிப்பை கென்றோல் பண்ண முடியாமல் இருக்கு என காப்சனும் போட்டு இருந்தார்.
இதோடு மட்டும் அல்லாது நாமினேசனில் இருக்கும் ராமிற்கு வோட் பண்ணியதோடு சினிமாவுல பல வாய்ப்புகள் கிடைத்தும் தன்னை தக்க வைத்து கொள்ளாத ராபர்டுக்கு பிக்பாஸ் ஒரு செகேன்ட் இன்னிங்ஸ் அதையும் கோட்டை விட்ட ராபர்ட் எலிமினேட் ஆவது தான் சரி.ராம் மற்றும் மணிகண்டன் பல கனவுகளோடு பிக்பாஸ்க்கு வந்துள்ளனர்.அவர்களுக்கு மேலும் தொடர வோட் செய்து வாய்ப்பளிப்பது எனக்கு சரியாக படுகிறது.புதியவர்களின் கனவுகள் வெற்றி பெற வழி செய்வோம்.என பதிவிட்டு இருந்தார்.இந்த வியடம் ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.
Listen News!