விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர். தற்போது கோபி தான் இரண்டாவது திருமணம் செய்ததே தவறு என யோசிக்கும் அளவுக்கு அவருக்கு சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அத்தோடு குடும்பம் ஒரு பக்கம், ராதிகா இன்னொரு பக்கம் என மாட்டிக்கொண்டு இருக்கும் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு குடித்துவிட்டு தள்ளாடிய கோபியை மூத்த மகன் தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து விடுகின்றார்.இவ்வாறு இருக்க கோபியின் தாயாரும் கோபி இங்கேயே இருக்கட்டும் என தங்க வைத்து விடுகின்றார்.
இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதாவது கோபி தாயிடம் கூறிவிட்டு நான் ராதிகா வீட்டையே போறேன் எனக் கூற அந்த நேரம் ராதிகா தனது மூட்டை முடிச்சுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகின்றார்.
புருஷன் இருக்கும் இடத்திற்கு தான் மனைவி வரவேண்டும் என கோவத்துடன் கூற எல்லோரும் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!