• Sep 20 2024

கோபியை விட்டு ஒரேயடியாக விலக ராதிகா எடுத்த முடிவு..பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

கோபி அங்கிள் பாவம் என மயூ சொல்ல அதை விட பாக்கியா ஆன்ட்டி பாவம் என ராதிகா கூற பாக்கியா ஆன்டி எதுக்கு பாவம் என மயூ கேட்கின்றாள். அதற்கு உனக்கு அதெல்லாம் சொன்னா புரியாது போக போக தெரியும் என சொல்கிறார்.

மேலும் இந்த நேரத்தில் கோபி ராதிகாவுக்கு உங்கள பார்க்காம என்னால இருக்க முடியல, நான் செத்துப் போய்டுவேன் போல இருக்கென வாய்ஸ் மெசேஜ் பண்ண மயூ திரும்ப மெசேஜ் பண்ண முயற்சி செய்கிறார். ஆனால் ராதிகா போனை பிடிங்கி கொள்கிறார்.

இதன் பிறகு கோபி பாத்ரூமுக்குள் செல்ல உள்ளே வந்த பாக்கியா கோபியின் போனை எடுத்து யார் அந்த நம்பர் என பார்க்க முயற்சி செய்ய அதற்குள் கோபி வந்து விடுகிறார்.

மேலும் கோபி கோபமாக போனை கேட்க பாக்கியா எனக்கு அந்த ஆளு யாரு என தெரிந்தாக வேண்டும். அது ஆணா பெண்ணா.? அவங்ககிட்ட பேசினா மட்டும் இங்கேயே டென்ஷன் ஆகாதீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி சத்தம் போட்டு விட்டு போனை புடுங்கி கொண்டு வெளியே செல்கிறார்.

இதன் பிறகு கோபியின் அப்பா நியூஸ் பேப்பரை நன்றாக வாசிப்பதைப் பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். அதன்பிறகு கோபி தனியாக இருக்கும்போது அவருடைய அப்பா நான் பேப்பர் படிப்பதைப் பார்த்து எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா நீ மட்டும்தான் அதிர்ச்சியாகிறாய். நான் பேசிட்டா எங்க உண்மைய சொல்லிடுவேனு உனக்கு பயம் என கூறுகிறார். ‌

இந்த பக்கம் கோபியை திருமணம் செய்துகொள்ளுமாறு ராதிகாவின் அம்மாவும் அண்ணன் சொல்ல ராதிகா நான் இங்கே இருந்தா தானே பிரச்சனை. மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போக போறேன். ஆனா ஒரு காலமும் என்னால கோபி கல்யாணம் பண்ணிக்க முடியாதென கூறுகிறார். ‌ இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement