• Sep 20 2024

தப்புன்னா தட்டிக் கேட்கணும், பாக்கியாவுக்கு உதவி செய்யும் ராதிகா, செழியன்-மாலினி பிரச்சினைக்கு முடிவு என்ன?- Baakiyalakshmi Promo

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது செழியன் மாலினியுடன் தொடர்பிலிருந்த விஷயம் ஜெனிக்கு தெரிந்து விட்டதால் ஜெனி வீட்டை விட்டு போய் விட்டார். இதனால் ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டுகின்றார்.


பாக்கியாவுக்கு இந்த விஷயம் தெரிந்தும் எங்களுக்கு சொல்லாமல் விட்டதால் தான் இவ்வளவு பிரச்சினை நடந்திச்சு என்கின்றார். இதைக் கேட்ட ராதிகா தப்பு பண்ணினது செழியன் அவனைக் கேட்காமல் பாக்கியாவைத் திட்டுவீங்களா என்று பாக்கியாவுக்கு சர்ப்போட் பண்ணுகின்றார்.

அத்தோடு பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்கும் போது அவருக்கு டீ போட்டுக் கொண்டு போய் கொடுக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement