விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.தற்போது இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி நகர்கின்றது.
இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்…
ராதிகா தன்னுடைய அம்மா மற்றும் அண்ணாவிடம் மயூவை கூட்டிக்கொண்டு மும்பை செல்ல போகிறேன். இனிமே கோபியுடன் கல்யாணம் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாமென சொல்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் பாக்கியா சமையல் செய்யுமிடத்தில் ஏதோ யோசனையில் இருக்க செல்வி அவரை அமைதிப்படுத்தினார். எழில் தாத்தாவிடம் சென்று அப்பாவிடம் என்ன பேசினீங்க ஏன் அவர் முகம் ஒரு மாதிரி இருந்துச்சு? ஏதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை பாதியில் வந்தவள் பாதையிலேயே போகப்போற அதுதான் உங்க அப்பன் வருத்தமா இருக்கான். கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் இந்த வீட்டில் எதுவும் தப்பா நடக்காது என சொல்கிறார்.
பின்னர் ராதிகா பாக்கியாவை கோவிலில் சந்திக்கிறார். அப்போது மயூவை அழைத்துக்கொண்டு மும்பைக்கு போகப் போகிறேன் என சொல்ல, போயிட்டு எப்ப வருவீங்க என பாக்கியா கேட்க... இனிமேல் வரமாட்டேன் டிரான்ஸ்பர் வாங்கி விட்டு போகிறேன் என சொல்ல பாக்கியா வருத்தப்படுகின்றார். அப்படியெல்லாம் சொல்லாதீங்க, கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா திரும்பி இங்கே வர மாட்டீங்களா என கேட்க வரமாட்டேன் என ராதிகா சொல்கிறார். மயூவை எங்க வீட்டில் விட்டுட்டு போங்க நான் பார்த்துக்கிறேன் அவளைப் பார்க்க வரும் போதாவது நீங்க என்ன பார்க்கலாமென சொல்கிறார். அவள் இல்லாம என்னால் இருக்க முடியாது என கூறுகிறார்.
இனிமே வர மாட்டேன் அதான் நல்லது. நான் தான் மும்பை போறேன்ல, இனி உங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இருக்காது என சொல்கிறார்.
நீங்க உங்க கணவரோட சந்தோஷமா இருங்க என ராதிகா சொல்கிறார். ஆனால் ராதிகா இப்படி உலர்வதை கேட்டு பாக்கியாவிற்கு ஒன்றும் புரிந்து கொள்ளாமல் சாதாரணமாகவே பேசுகின்றார். மும்பை போனாலும் அடிக்கடி எங்களைப் பார்க்க இங்க வாங்க இல்லை என்றால் கண்டிப்பா நான் உங்களைத் தேடி அங்கு வருவேன்.மேலும் உங்க கூட பிறந்த மாதிரி நினைச்சு பழகிட்டேன். உங்களை பாக்காம என்னால் இருக்க முடியாது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிற செய்திகள்
- மீண்டும் இணையும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!
- குக்வித்கோமாளி பாலாவை இப்படி பார்த்திருக்கிறீர்களா..? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
- வாரிசு படத்திற்காக விஜய் வாங்கியுள்ள சம்பளம்-இத்தனை கோடியா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை- அதிர்ச்சியில் திரையுலகம்..!
- இயக்குநர் லிங்குசாமியிடம் மன்னிப்புக் கேட்ட பிரபல நடிகர்-இது தான் காரணமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!