• Sep 20 2024

கோபியை திருமணம் செய்ய ராதிகா போட்டோ கண்டிஷன்.. இனியாவால் பதறிப்போகும் பாக்யா குடும்பம்-இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்புக்கட்டத்தை நோக்கி நகரும் சீரியல் பாக்கியலட்சுமி தொடர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் கோபியுடன் திருமணம் செய்து வைக்க வேலைகளை பார்க்க சொல்ல கல்யாணமா இப்ப எதுக்கு என ராதிகா கூற கோபி அதிர்ச்சி அடைகிறார்.இதன்  பிறகு உனக்காக வீடு பொண்டாட்டி பிள்ளைகள், அப்பா, அம்மா எல்லோரையும் உதறி தள்ளிட்டு வந்திருக்கேன்.

 இப்போ உடம்பு சரியில்லை நான் கூட தண்ணி கொடுக்க யாரும் கிடையாது என கோபி  கூறுகிறார்.இதன் பிறகு ராதிகா இன்னொரு முறை நானும் என் பொண்ணு மயூவும் நிற்கதியா நிற்கிற நிலை வராதென்று எனக்கு பிராமிஸ் பண்ணுங்க என சொல்ல கோபி சத்தியமா வராது. நூறு சதவீதம் உனக்கு நான் ப்ராமிஸ் பண்றேன் என  சொல்கிறார்.

மேலும் இந்த பக்கம் பாக்யா பேப்பரில் ஒரு கல்யாண மண்டபத்திற்கு கேப்டன் சர்வீஸ் ஆர்டரை பார்த்து விட்டு அதை எடுக்கலாம் என முடிவு செய்து ஜெனியிடம் உதவி கேட்கிறார்.

இது பெரிய மண்டபம் ஒரே நேரத்துல நாலஞ்சு கல்யாணம் நடக்கும் அதை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம் என கூற பாக்கியா தன்னம்பிக்கையாக சில வசனங்களை பேசி அப்ளை செய்ய சொல்கிறார்.



இதன் பிறகு கோபி ஸ்கூலில் இனியாவை பார்க்க இருவரும் வெளியே போக முடிவெடுத்து கிளம்ப இந்த பக்கம் பாத்தியா வீட்டுக்கு இனிய வராததால் பதறிப்போக பிறகு வேன் டிரைவருக்கு போன் போட்டு கேட்க அவர் இனிய பஸ்ஸில் வரவில்லை என சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.



 இந்த விஷயத்தை கேட்டு குடும்பத்தால் எல்லோரும் அதிர்ச்சி அடைய ஈஸ்வரி எல்லாத்துக்கும் நீதான் காரணம் என பாக்கியா மீது பழியை போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.



Advertisement

Advertisement