• Sep 20 2024

புதிய வீடு கட்டிய ராதிகா சரத்குமார்- சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த தனுஷ்- வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகராக பல ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்தான் சரத்குமார் .இவர் தமிழ் திரைப்பட உலகில் புகும்போது பல எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர்,சூரியன்  படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றவர். இவர் புலன்விசாரனை , சேரபாண்டியன் , சூரிய வம்சம், நாட்டாமை, நேதாஜி, ரகசிய பொலிஸ், கம்பீரம் என பல படங்கள் நடித்து ரசிககளை வசீகரப்படுதியுள்ளார்.


மணவாழ்க்கை

 திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரை சரத்குமார் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர்.பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். 

அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன்  சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார். இவர்கள் தற்பொழது பது வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர். இதற்கு நடிகர் தனுஷ்கலந்துகொண்டுள்ளார் .


நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பிஸியாக தனுஷ் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சரத்குமார், ராதிகா தம்பதியரின் புதுமனை புகுவிழாவில் குறிப்பிட்ட சில சினிமா நண்பர்களை மட்டும் அழைத்துள்ளனர் . இதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டதை போட்டோ உடன் ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement