• Sep 20 2024

பாக்கியாவையும் கோபியையும் ஒன்றாகப் பார்த்த ராதிகா- அமிர்தாவைத் தேடி வந்த கணேஷ்- செழியனை தொந்தரவு செய்யும் மாலினி- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினனம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜெனிக்கு குழந்தை பிறந்ததால் எல்லோரும் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.செழியனே இப்ப தான் பிறந்த மாதிரி இருக்கு அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திடுச்சு என்று ராமமூர்த்தி சொல்ல எல்லோரும் சிரித்து சந்தோஷமடைகின்றனர்.அப்போது ராதிகா ஜெனியைப் பார்ப்பதற்காக வருகின்றார்.


அப்போது பாக்கியாவும் கோபியும் குழந்தையை கொஞ்சிட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.பின்னர் தானும் போய் குழந்தையைக் கொஞ்சுவதோடு ஜெனியிடம் உடல்நிலை குறிதது கேட்கின்றார். மேலும் ராதிகா உள்ளே வந்ததும் பாக்கியா வெளியில் போகின்றார்.அதன் பின்னர் ராதிகா தன்னுடைய ஆபீஸில் பங்சன் இருக்கு என்று கூறுகின்றார்.

இந்த பங்சனுக்கு பாமிலியாக போகனும் நீங்களும் வாங்க என்று சொல்கின்றார். அதற்கு கோபி தான் செழியன் கூட ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன் நீ போய்ட்டு வா என்று சொல்ல ராதிகா என்னோட ஒரு விஷயத்திலும் நீங்க வரமாட்டீங்க பரவாயில்லை நான் போறேன் என்று போக கோபி இரு நானும் வாறேன் என்று கிளம்பிப் போகின்றார்.


மறுபுறம் கணேஷ் அமிர்தா படித்த காலேஜிற்கு சென்று அமிர்தா பற்றி விசாரிக்கின்றார். அப்போது அமிர்தாவைத் தெரிந்த ஒருவர் அமிர்தா இருந்த வீட்டின் அட்ரஸ்ஸை சொல்கின்றார். கணேஷும் அவருக்கு தன்னுடைய ரெலிபோன் நம்பரைக் கொடுத்து அமிர்தா பற்றி தெரிந்தால் எனக்கு சொல்லுங்க என்று சொல்லி விட்டு கிளம்பிச் செல்கின்றார்.

மேலும் காரில் கோபியும் ராதிகாவும் போய்க் கொண்டிருக்கும் போது கோபி செழியனுக்கு குழந்தை பிறந்தது பற்றி  சந்தோசமாக பேசிட்டு வரும் போது ராதிகா பாக்கியா பக்கத்தில கோபி நின்று குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த விஷயத்தைக் கேட்டு திட்டுகின்றார். இதனால் கோபியும் சமாளிக்கின்றார்.


அடுத்து ஹாஸ்பிட்டலுக்கு வரும் செழியன் குழந்தையைப் போய் பார்த்து விட்டு குழந்தைக்கு என்ன பெயர் வைச்சிருக்கு என்று விசாரிக்கின்றார். அப்போது பாக்கியா இப்போ தானே குழந்தை பிறந்திருக்கு, பெயர் வைக்க எல்லாம் இன்னும் நாளிருக்கு என்கின்றார்.அத்தோடு ஜெனி ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரைக்கும் அமிர்தா தான் சாப்பாடு கொண்டு வந்து தருவார் என்கின்றார்.பின்னர் ஹாஸ்பிட்டலில் நான் இருக்கிறேன் நீங்க இன்டைக்கு வீட்டுக்கு போய்ட்டு வாங்க என ஜெனியின் அம்மாவை பாக்கியா அனுப்பி வைக்கின்றார்.

மேலும் செழியன் வெளியில் நிற்கும் போது மாலினி போன் பண்ணி எங்க இருக்கிறீங்க, வீட்டுக்கு வாங்க என்று அழைக்கும் போது செழியன் என்னால் வர முடியாது நான் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன். ஜெனிக்கு குழந்தை பிறந்திருக்கு என்கின்றார். இதைக் கேட்ட மாலினி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement