• Sep 20 2024

கான்டீனை விட்டு துரத்தாமல் விடமாட்டேன் என்று சபதம் போட்ட ராதிகா- அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி பெயரில் இருக்கும் வீட்டை பாக்கியா பெயரில் மாற்றுவதற்காக எழில் ,ராமமூர்த்தி, பாக்கியா,கோபி ஆகியோர் ரிஜிஸ்டர் ஆபிஸில் இருக்கின்றனர். பின்னர் கோபி பாக்கியாவின் பெயரில் வீட்டை மாற்ற மனமில்லாமல் மாற்றிக் கொடுக்கின்றார். ரிஜிஸ்டர் முடிந்து வெளியே வந்ததும் எழில் இனிமேல் அந்த வீட்டுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை நீங்கள் வரக் கூடாது என்கின்றார்.


தொடர்ந்து வீட்டுக்கு வந்ததும் எழில் தான் வாங்கி வைத்திருந்த பாக்கியலட்சுமி என்று எழுதப்பட்ட போஃட்டை வாசலில் மாட்டுகின்றார்.இதனை கோபியும் ராதிகாவும் வீதியில் நின்று பார்க்கின்றனர். பின்னர் கோபியை ஏற்றி விட அந்த போஃட்டுக்கு பக்கத்தில் நின்று போட்டோ எடுக்கின்றார். இதனைப் பார்த்த கோபியும் ராதிகாவும் கடுப்பாகின்றனர்.

பின்னர் கோபி அவர்களிடம் சண்டைக்கு போக முயல ராதிகா தடுத்து நிறுத்துகின்றார். அடுத்து வீட்டில் எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது அமிர்தாவின் அம்மா அப்பா வர எல்லோரும் நலம் விசாரிக்கின்றனர். பின்னர் கான்டீனில் ராதிகா தோசை கேட்டு விட்டு இருக்க செல்வி தோசையை அடுத்த டேபிலுக்கு மாற்றிக் கொடுத்து விடுகின்றார்.


இதனால் கடுப்பான ராதிகா கத்துகின்றார்.அத்தோடு நான் வீட்டை விட்டு எப்ப போவேன் என எண்ணிணீங்க தானே நீங்களும் எண்ணிக்கோங்க, உங்களையும் இந்த கான்டீனை விட்டு சீக்கிரமாக கலைக்காமல் விடமாட்டேன் என சபதம் போட்டு விட்டுச் செல்கின்றார்.இதனால் பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement