• Sep 20 2024

தேர்தலில் தோற்றதால் தனது ஆட்டத்தை ஆரம்பித்த ராதிகா...கதறி அழும் பாக்கியா..பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இத்தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பாக்யாவிற்கு கிடைக்க இருந்த சமையல் ஆர்டரை ராதிகா கெடுத்து விட்டார். பாக்யாவின் கணவர் கோபியின் இரண்டாவது மனைவிதான் ராதிகா. ராதிகா ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 

மேலும்  அங்கு கேண்டீன் ஆர்டரை பிடிப்பதற்காக பாக்யா மிகுந்த முயற்சி செய்தார். ஆனால் பாக்யா மீது இருக்கும் வன்மத்தை காட்டுவதற்காக ராதிகா அந்த ஓனரிடம் பேசி அந்த ஆர்டரை கேன்சல் செய்யுமாறு செய்துவிட்டார். பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது காலனியில் செக்கரட்டரி தேர்தல் நடைபெற்றது.

அந்த  தேர்தலில் ராதிகா 112 வாக்குகள் வாங்க, பாக்யா 1260 வாக்குகளுக்கு மேல் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். இதனால் பாக்யா மீது மிகக் கடுப்பில் இருக்கிறார் ராதிகா. பாக்கியாவை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று ராதிகா எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு நல்ல வாய்ப்பாக கேண்டீன் ஆர்டரை கெடுக்கும் வாய்ப்பு  தற்போது கிடைத்துள்ளது.

பாக்கியாவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தன் சமையல் மீதான நம்பிக்கை தான். மேலும் அவர் ஒரு திருமண மண்டபத்தின் ஆர்டரை எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டியிருந்தார். ஆனால் அந்த திருமண மண்டபத்தின் ஆர்டர் தனது கணவரின் இரண்டாவது கல்யாணம் என்று தெரியாமலேயே பாக்யா செய்திருந்தார். ஆனால் பாக்யாவிற்கு அந்த திருமண மண்டபத்தில் ஓனர் மிகப்பெரிய ஐடி கம்பெனி ஒன்றின் கேண்டீன் ஆர்டரை பிடித்துக் கொடுத்திருந்தார். 

அந்த கம்பெனியில் தான் ராதிகாவும் வேலை பார்த்து வருகின்றார். பாக்யாவிற்கு அந்த கம்பெனியின் ஓனர் ஒரு செக் ஒன்றை வைக்கிறார். மேலும் அதில் நீங்கள் இந்த ஆர்டரை பிடிக்க வேண்டுமானால் ஏழு லட்சம் ரூபாய் முன்பணமாக கட்ட வேண்டுமென்று கூறுகிறார். அதையும் ஏற்றுக்கொண்டு பாக்கியா அந்த கம்பெனியின் ஆர்டரை பிடிக்கிறார்.எனினும் தற்போது கம்பெனிக்கு வரும் பாக்யாவுக்கு கேண்டீனை அந்த கம்பெனியின் ஓனர் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென  அங்கே வரும் ராதிகா இவருக்கு ஏன் ஆர்டர் கொடுக்கிறீர்கள் இவர் அவ்வளவு பெரிய சமையல்காரர் எல்லாம் ஒன்னும் கிடையாது என்று தப்பு தப்பாக போட்டு கொடுக்கிறார். இதனால் கம்பெனியின் ஓனரும் பாக்கியாவிடம் சாரி உங்களுக்கு சமையல் ஆர்டரை கொடுக்க முடியாது என்று  திடீரென கூறுகிறார். இதனால் பாக்கியா கதறி அழுகிறார். இதை நம்பித்தான் நான் நிறைய பணம் போட்டுவிட்டேன். என்று சொல்லி அவர் புலம்பி அழுகிறார். அதை பார்த்த ராதிகா சந்தோசத்தில் வன்மத்துடன் சிரித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement