• Sep 20 2024

ட்ரிப்புக்கு இனியாவுடன் போக இருந்த கோபிக்கு ராதிகா போட்ட கண்டிசன்- மாலினியுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கும் செழியன்-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மயூ வயசுக்கு வந்ததால் அவளுக்கு நாளைக்கு பங்சன் பண்ணனும் இனியா கூட ட்ரிப் போக வேண்டாம் என்று ராதிகா சொல்கின்றார். இதைக் கேட்ட கோபி ராதிகாவை சமாதானம் செய்த முயற்சித்தும் ராதிகா சம்மதம் தெரிவிக்கவில்லை. ட்ரிப் போனால் அப்பிடியே போய்டுங்க என்று சென்னதால் கோபி என்ன செய்வதென்று யோசிக்கின்றார்.


பின்னர் இனியாவை அழைத்து மயூ வயசுக்கு வந்திட்டா, அதனால் ட்ரிப் போக முடியாது ட்ரிப்பை ஒரு வாரம் தள்ளி வைப்பமா என்று கேட்கின்றார்.இதனால் அதிர்ச்சியடைந்த இனியா அவங்க சொல்லு டைமுக்கு தான் நாங்க போகே முடியும் நம்ம இஸ்டத்திற்கெல்லாம் போகமுடியாது என்று சொல்கின்றார். அப்போது கோபி நீ நாளைக்கு ட்ரிப் போறதுக்கு நான் எப்பிடியாவது ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி விட்டு போகின்றார்.

பின்னர் வீட்டுக்கு வந்ததும் ராதிகாவிடம் ர்ரிப்புக்கு போகல என்று சொல்கின்றார். அப்போது ராதிகா போகாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லம் என்று திட்டி விட்டு உள்ளே செல்கின்றார். அப்போது கோபி செழியனுக்கு போன் பண்ணி இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்கிறார். ட்ரிப் மாலினியுடன் இமர்ந்திருந்து மது அருந்திக் கொண்டிருந்ததோடு தன்னால் போக முடியாது ஆப்பீஸ்ல லீவு தரமாட்டாங்க என்று சொல்லி போனை கட் செய்து விடுகின்றார்.


தொடர்ந்து வீட்டில் எல்லோரும் சாப்பிட இருக்கும் போது ஜெனி நடந்த விஷயத்தைச் சொல்ல ஈஸ்வரி கோபியைத் திட்டுகின்றார். பின்னர் எழில் வந்ததும் இனியாவைக் கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்கின்றனர். அதற்கு எழில் 2 நாள் சூட்டிங் இருக்கு, அதை முடிச்சிட்டு போவமா என்று கேட்க இனியா அப்பிடி எல்லாம் போக முடியாது என்று சொல்ல, எல்லோரும் ஆறுதல்ப்படுத்துகின்றனர்.

பின்னர் பாக்கியாவும் எழிலும் இனியா ட்ரிப்புக்கு போகாததால் கவலையாக இருக்கிறாளே என்ன பண்ணலாம் என்று யோசிச்சு, செழியனிடம் போன் பண்ணிக் கேட்கின்றனர். அப்போது செழியன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு போக முடியாது என்று சொல்லி விடுகின்றார். இதனால் பாக்கியா என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement