• Sep 20 2024

யமுனாவை ஏமாற்றிக் கடத்திச் சென்ற ராகவ்-வீதி வீதியாக தேடிச் செல்லும் காவேரி மற்றும் கங்கா- பரபரப்பான திருப்பங்களுடன் மகாநதி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.தகப்பனை இழந்த 4 பெண் பிள்ளைகள் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற என்னவெல்லாம் செய்யப் போகின்றார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

குமரனுக்கும் கங்காவுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. குமரன் கங்காவைத் திருமணம் செய்தது குமரனின் அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை.இதனால் குமரன் கங்கா வீட்டில் இருக்கின்றார்.


இது தவிர நிவினின் அம்மா காவேர நிவினுடன் பழகுவது தப்பு என்று வீட்டுக்கே சென்று சண்டை பிடித்ததால் காவேரி நிவினுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். இதனால் நிவின் எப்போது தன்னுடைய காதலை காவேரியிடம் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் பசுபதி பற்றிய உண்மைகள் அனைத்தும் காவேரி குடும்பத்திற்கு தெரிந்ததால் பசுபதியின் மகன் ராகவ்வுடன் பேசுவதை யமுனா தவிர்த்து வருகின்றார். இதனால் கடுப்பான ராகவ் யமுனாவிடம் எங்க அப்பா ஏமாற்றி வாங்கிய காணியை எப்படியாவது மீட்டுத் தருகிறேன் என பொய் சொல்லி யமுனாவை தனியாக அழைத்து செல்கின்றார்.

அத்தோடு யமுனாவை தனியாக ஒரு ரூமுக்குள் வைத்து பூட்டி விடுகின்றார்.யமுனாவைத் தேடி கங்காவும் காவேரியும் திரிகின்றனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன பிரச்சினை வரப்போகின்றது அதனை எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement