தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உட்படப் பல படங்களில் நடித்து வருகிறார்.
எனினும் தற்போது லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குகிறார்.இவ்வாறுஇருக்கையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு மருத்துவ நிதி உதவியை செய்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அத்தோடு சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அத்தோடு அடுத்தடுத்து பேட்டி கொடுத்து வந்த இவர் இயக்குநர் பாலா தன்னை ஏமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார்.
தற்போது அண்ணா நகரில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல்நலக்குறைவு விசயத்தை கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து யோசித்துள்ளார். அதன்படி, தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மருத்துவ செலவிற்காக, நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ரூபாய் 3 லட்சத்தை மருத்துவ மனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.
Listen News!