• Sep 20 2024

சரஸ்வதியை நினைத்து சந்தோஷமாக இருக்கும் ராகினி- கடும் கோபத்தில் இருக்கும் அர்ஜுன்- கோதை எடுத்த முடிவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதியை செக் பண்ணுவதற்காக எல்லோரும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு போயிருக்கின்றனர். அங்கு தமிழ் சரஸ்தியைப் பற்றி டாக்டர் ஏதாவது சொல்லிடுவாரோ என்ற பயத்தில் இருக்க, கோதை அப்பிடி ஒன்றும் இருக்காது எல்லாம் நல்லதாத் தான் நடக்கும் என்கின்றார்.அப்போது வெளியே வந்த டாக்டர் சரஸ்வதிக்கு பயப்பிற மாதிரி எதுவும் இல்லை. அவளை நல்லாப் பார்த்துக்கோங்க பாரமான வேலை எதுவும் செய்யக்கூடாது என்கின்றார்.


இதைக் கேட்ட கோதை எல்லாருமா சேர்ந்து சரஸ்வதியை நல்லாப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்கின்றார். மறுபுறம் அர்ஜுன் குடும்பம் தமிழை எதுவும் செய்ய முடியலையே என்ற ஆதங்கத்தில் பேசிக் கொண்டிருக்க, அபி ராகினியை அழைத்து சரஸ்வதி கர்ப்பமாகத் தான் இருக்கிறாங்க இப்ப தான் ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிட்டு வந்திருக்கிறாங்க என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட ராகினி, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு,என்னோட வளைகாப்பு பங்சன்ல வைச்சு சரஸ்வதி அண்ணி கர்ப்பமாக இருக்கிறாங்க என்று சொன்னது தான் என்னால நம்பவே முடில ஆனாலும் உங்க மேல எனக்கு வருத்தம் இருக்கு என்று அர்ஜுனின் அம்மாவைப் பார்த்து சொல்ல,அவர்கள் சம்பிரதாயம் என்ற ஒன்று இருக்கு தானே அதற்காகத் தான் அவங்களை சடங்கு பண்ணத்தடுத்தோம் என்று சமாளிக்கின்றனர்.


தொடர்ந்து அர்ஜுனும் சரஸ்வதி கர்ப்பமாகியது தனக்கும் சந்தோஷம் என்பது போல கூறுகின்றார். மறுபுறம் தமிழ் எல்லோருக்கும் வுசிட் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார். நடேசன் கோதைக்கும் கொடுக்கச் சொல்ல தமிழ் கொண்டு போய் கொடுக்கின்றார். அந்த நேரம் தமிழ் வீட்டு ஹவுஸ் ஓனர் வர வசு சரஸ்வதி ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு நல்லது நடந்திடுச்சு பார்த்தீங்களா என்று கேட்கின்றார்.


அத்தோடு கோதை, சொத்து தான் நம்ம கையை விட்டுப் போனாலும் புதுசா ஒரு உறவை கடவுள் நமக்குத் தந்திருக்காரு என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்கின்றார்.மேலும் தமிழை எதுவும் பண்ண முடியாமல் போச்சே,ஒருநாள் அவனையும் அவமானப்படுத்தாமல் விடமாட்டேன் எனன தன்னுடைய மாடாவிடம் புலம்புகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement