• Sep 21 2024

திடீரென அர்ஜுன் குடும்பத்தை திட்டிய ராகினி- தமிழுக்காக கோதை செய்த காரியம்- அர்ஜுன் எடுத்த முடிவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கெண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினி எதற்காக அம்மாவைப் பற்றி தப்பா பேசினீங்க என்று கேட்ட போது அர்ஜுன் அவங்களா தான் வந்து பேசினாங்க. அதனால தான் அப்பிடிப் பேசினோம் என்று சொல்ல ராகினி கோபத்தில் திட்டுகின்றார். இதனால் அர்ஜுன் விடு ராகினி நான் நேற்றே மாமாவைத் திட்டிட்டேன். இதையே நினைத்து நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்காத என்று சமாளித்து விட்டு செல்கின்றார்.


தொடர்ந்து கோதை சரஜ்வதியை சமைக்க விடாமல் தானே சமையல் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு எல்லோரையும் சாப்பிட அழைக்கின்றார். அப்போது எல்லோரும் சாப்பிடுகின்றனர். சாப்பாடு வித்தியாசமான சுவையாக இருப்பதைப் பார்த்த தமிழ் சரஸ்வதியிடம் உண்மையாகவே நீ தான் சமைச்சியா என்று கேட்கின்றார்.

அதற்கு சரஸ்வதியும் வசுவும் ஆமாம் நான் காய்கறி வெட்டிக் கொடுக்க சரஸ்வதி தான் சமைத்தாங்க என்று சொல்ல, தமிழ் நீ பொய் சொல்லுற இதை யார் சமைச்சாங்க என்று தெரியும் என்று சொல்லி விட்டு நல்லா இருக்குது என்று வாங்கி வாங்கி சாப்பிடுகின்றார். அப்போது அர்ஜுன் எனக்கு ஒன்றும் இதில வித்தியாசம் தெரியலையே என்று சொல்ல,நடேசன் இது உங்க சமைச்சதுடா என்று சொல்ல எல்லோரும் சந்தோசமாக சாப்பிடுகின்றனர்.


மறு புறம்  ராகினி வீட்டில் எல்லோரும் அசைவ சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அர்ஜுனின் மாமா நல்ல காலம் அந்த கோதை குடும்பம் இல்லை. இருந்திருந்தால் இப்பிடி எல்லாம் சாப்பிட முடியுமா என்று கோதை பற்றி தப்பா பேச கடுப்பான ராகினி எதுக்கு இப்போ எங்க அம்மாவைத் திட்டிறீங்க, இனிமேல் அவங்க பற்றி தப்பா பேசினால் நான் சும்மா இருக்கமாட்டேன் என்று திட்டி விட்டு உள்ளே செல்கின்றார்.

இதனால் கடுப்பான அர்ஜுன் தன்னுடைய குடும்பத்தை தனியாக அழைத்துச் சென்று இன்னும் சொத்து நம்ப பேருக்கு வரல, ராகினி பேர்ல தானே இருக்கு, நீங்க இப்பிடி பண்ணிட்டு இருந்தால் அவளுக்கு நம்ம மேல கோவம் தான் வரும். எனக்கு கோதை மேல தான்கோவம் ஆனால் ராகினியை உண்மையைாக லவ் பண்ணுறேன். இனிமேல் பார்த்து நடந்துக்கோங்க என்று திட்டி விட்டு உள்ளே போகின்றார்.


தொடர்ந்து கார்த்திக் இன்னொரு கம்பனிக்கு வேலை விஷயமாகப் பேசப் போகனும் என்று கூறும்போது தமிழ் நீ எதுக்கு வேற கம்பெனிக்கு போற நம்ம கம்பெனியிலையே வந்து வேலை செய்தால் எனக்கும் உதவியாக இருக்கும் என்று சொல்ல கோதை அண்ணன் சொல்லுறதை கேளுடா என்று சொல்ல கார்த்திக்கும் தமிழ் கம்பெனிக்கு போகின்றார்.

தொடர்ந்து கம்பெனிக்கு கார்த்திக்கை கூட்டிட்டு போன தமிழ் எல்லோருக்கும் அர்ஜுனை அறிமுகப்படுத்தி வைக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement