• Sep 20 2024

தன் குடும்பத்தின் சொத்து முழுவதையும் பறிக்க ஆசைப்படும் ராகினி- செம குஷியில் அர்ஜுன்- தமிழால் அதிர்ச்சியில் உறைந்த கோதை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பங்சனுக்கு தமிழ் வந்ததால் கோபத்துடன் வீட்டுக்கு வந்த ராகினியை அவரது மாமியார் நீ வீட்டை விட்டு கிளம்பினால் தமிழ் ஜெயிச்ச மாதிரி போய்டும் அது உனக்கு பரவாயில்லையா என்று ஏற்றி விட ராகினி நான் எதுக்கு வீட்டை விட்டுப் போகனும் நான் இங்க தான் இருப்பேன் என்று சொல்ல அர்ஜுன் குடும்பம் ரொம்ப சந்தோஷப்படுகின்றது.

தொடர்ந்து வீட்டில் பங்சனுக்கு போய்ட்டு வந்ததால் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக சரஸ்வதி சொல்கின்றார்.அப்போ நமச்சி நீங்க தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது அந்த அர்ஜுன் இல்லாமல் போய்ட்டானே அப்பவே நாம ஜெயிட்டம் தான் என்று சொல்கின்றார். அந்த நேரம் ஹவுஸ் ஓனரின் மனைவி வந்து பங்சன் பற்றி பேசி விட்டு உனக்கு சீக்கிரமாவே குழந்தை பிறக்கும் என்று சொல்லி விட்டு கிளம்புகின்றார்.


இதனால் சரஸ்வதி சந்தோஷத்தில் இருக்கின்றார். தொடர்ந்து வசு எல்லோரும் வீட்டுக் வர ராகினி இருக்க ராகினியைப் பார்த்து நீ இன்னும் போகலையா என்று நக்கலடிக்கின்றார். அப்போது ராகினியும் அவன் நல்லா இருக்கனும் என்று ஆசீர்வாதம் பண்ணிட்டு வந்திருக்கிறீங்க என்று திரும்ப சண்டை பிடிக்கின்றார்.

அப்போது வசு மாமாவுக்கு இன்டைக்கு பிறந்தநாள் அதை மறந்திட்டு பேசிட்டு இருக்கிறோம் என்று மாமாவுக்கு வாழ்த்துக் கூற எல்லோரும் சேர்ந்து வாழ்த்துகின்றனர். இதைப் பொறுக்கமுடியாமல் மேலே சென்று ராகினி கோபத்தில் இருக்க அர்ஜுன் சமாதானப்படுத்துகின்றார்.அப்போது ராகினி முழுச் சொத்தையும் நாம பறிச்சிட்டு இவங்க எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்பனும் போல இருக்கு அப்பிடி செய்தாலும் தப்பில்லை என்று சொல்ல அர்ஜுன் மனதிற்குள் சந்தோஷப்படுகின்றார். 


பின்னர் தமிழும் சரஸ்வதியும் புதுக்கம்பனி வாங்குவதைப் பற்றி பேசிவிட்டு ரொமான்ஸ் பண்ணுகின்றனர். தொடர்ந்து விடிந்ததும் கோதை ராகினியின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் அர்ஜுனும் அவரது அக்கா புருஷனும் தாங்க வாங்க இருந்த கம்பனியை தமிழ் வாங்கப் போறான் என்று சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement