• Sep 20 2024

தமிழை போலீஸில் பிடிச்சுக் கொடுக்கப் போன ராகினி- உண்மையை போட்டுடைத்த நமச்சி- நைசாக நழுவிய அர்ஜுன்- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜெயந்தி வீட்டிலிருந்து போன் பார்த்துக் கொண்டிக்கின்றார். அப்போது அவருடைய அம்மா வேலைகளை செய்ய வரச் சொல்ல ஜெயந்தி தன்னால் முடியாது என்கின்றார்.அந்த நேரம் பார்த்து அபி வருகின்றார். அபியைப் பார்த்ததும் ஜெயந்தியும் அவரது அம்மாவும் நீ எதுக்கு இங்க வந்த அதான் அவங்க கூட போய்ட்டியே இப்போ எதுக்கு வந்த என்று கேட்க ராகினி தான் என்னை வரச் சொன்னாங்க என்கின்றார்.


அந்த நேரம் ராகினியும் வந்து நான் தான் அத்தை வரச் சொன்னேன், என்கூட அவ இருக்கட்டுமே நீ உள்ள வா அபி என்று கூட்டிட்டு போக அந்த நேரம் அர்ஜுனும் அவரது மாமாவும் காயங்களுக்கு கட்டுப் போட்டு வருகின்றனர். அதைப் பார்த்த ராகினி என்னாச்சு என்று கேட்க அர்ஜுனின் மாமா தமிழ் அடித்த விஷயத்தைச் சொல்ல கடுப்பாகிய ராகினி அர்ஜுனைக் கூட்டிக் கொண்டு போகின்றார்.

மறுபறம் அபியை ராகினி வீட்டுக்கு அனுப்பி வைத்த விஷயம் தெரிந்ததால் நடேசன் கோதையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார். அப்போது ராகினி அர்ஜுனைக் கூட்டிக் கொண்டு வந்து எதுக்காக அடிச்சீங்க குடும்பமாக சேர்ந்து என் புருஷனை கொலை பண்ணலாம் என்று நினைச்சுக் கொண்டிருக்கிறீங்களா எனத் திட்டுகின்றார்.


அத்தோடு போலீஸில் கொடுக்கப்போவதாகச் சொல்ல நமச்சி கொண்டு போய் குடுமா, சும்மா இருந்த எங்க கூட சண்டைக்கு வந்ததே இவங்க தான், அதுவும் உன் புருஷன் தமிழைக் கட்டையால அடிக்க வந்தான், இது உங்க கம்பனி வாசலில் தான் நடந்திச்சு எல்லாரும் பார்த்திட்டு தான் இருந்தாங்க போலீஸ் வந்து விசாரிக்கட்டும். அப்போது யாரில தப்பு என்று தெரிஞ்சிடும் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்ட அர்ஜுன் வா ராகினி போகலாம் இவங்க கிட்ட எல்லாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று நடிக்க ராகினி , இல்ல போலீஸுக்கு போகலாம் என்று சொல்ல,தலை சுற்றி மயங்கி விழ அர்ஜுன் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகின்றார். ஹாஸ்பிட்டலில் டாக்டர் அர்ஜுனிடம் ராகினியை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்கின்றார்.


அப்போது அர்ஜுன் இந்த பிரச்சினைகள் எல்லாத்தையும் மறந்திருங்க, ராகினியை சந்தோசமாக வைச்சிருப்போம் என்று அவரது குடும்பத்திற்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். தொடர்ந்து கோதை ராகினியைப் பார்க்க போக வேண்டும் என்று சொல்ல நடேசன் திட்டுகின்றார். இதனால் கோதை அபியிடம் போன் பண்ணி விசாரிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement