• Sep 20 2024

பணத்துடன் தமிழ் வீட்டுக்கு போன ராகினி- தமிழை அசிங்கப்படுத்திய அர்ஜுன்- கடும் கோபத்தில நடேசன்- Thamizhum Saraswathiyum Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினி தன்னுடைய வீட்டுக்கு பணம் கொடுக்கனும் அதுக்காக 40 லட்சம் செக் எழுதிக் கொடுக்கப்போகின்றேன் என்று கூறுகின்றார். அதற்கு அர்ஜுனும் ஓகே சொல்கின்றார். நீ பணத்தைகொண்டு போய் கொடு என்று சொல்ல ராகினி 40 லட்சம் பணத்திற்கான செக்கை எழுதிக் கொண்டு அபியுடன் தமிழ் வீட்டுக்கு போகின்றார்.


ராகினியைக் கண்டதும் கோதையும் சரஸ்வதியும் உள்ளே கூப்பிட, நடேசன் இவங்க இங்க எதுக்கு வந்தாங்க என்று திட்டுகின்றார். இருந்தாலும் சரஸ்வதி உள்ளே கூட்டிட்டு போய் ராகினியை உட்கார வைக்கின்றார். கார்த்திக்கும் ராகினி எதுக்காக இங்க வந்திருக்கிறா என்று சண்டை போடுகின்றனர்.

தொடர்ந்து ராகினி கொண்டு வருகின்ற செக்கை யாரும் வாங்கிடக் கூடாது என்பதற்காக அர்ஜுன் தமிழுக்கு போன் பண்ணி வெறுப்பேற்றுகின்றார். நாங்க தருகின்ற காசில தான் உங்க கம்பெனியை ஆரம்பிக்க போறீங்களா, நான் வந்து தான் உங்களுக்கு உதவனும் போல இருக்கு, என் பொண்டாட்டி கிட்ட பணம் கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோங்க,


கடைசில நாங்க பிச்சை போட்டு தான் நீங்க வாழவேண்டி இருக்கு என்று சொல்கின்றார். இதனால் ராகினி தன்னுடைய அம்மாவிடம் பேசிட்டு இருக்கும் போது 40 லட்சத்திற்கான செக்கை எடுத்துக் கொடுக்கின்றார்.அப்போது தமிழ் யாருக்கு பிச்சை போடுறிங்க அதை எடுத்திட்டு போ என்கின்றார். 

இதனால் கடுப்பான ராகினி என்னை ஒதுக்கு வைச்சிட்டீங்க தானே என்று சொல்ல, உன் புருஷனால தான் இந்த நிலமைக்கே வந்தோம் அவன் கிட்ட சபதம் போட்டிருக்கிறோம. எப்படியாவது இதில் இருந்து மீண்டு வந்திடுவோம் என்று தமிழ் சொல்கின்றார். இதனால் ராகினி கோபித்துக் கொண்டு போகின்றார். தொடர்ந்து அசோசியேசனால் ஹாட் ஆப்பிரேஷன் செய்யும் ஓனருக்கு எப்படி பணம் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.


அப்போது தமிழ் எல்லோரும் 25 ஆயிரம் கொடுத்தால் ஆப்பிரேஷனுக்கான பணத்தைக் கொடுத்திடலாம் என்று சொல்ல எல்லோரும் சம்மதம் தெரிவித்து விட்டு போகின்றனர்.இதனால் தமிழ் சரஸ்வதியின் கம்மலைக் கொண்டு போய் அடைவு வைக்கின்றார். அப்போது அந்த கம்மல் 25 ஆயிரம் பெறுமதி வராது என்று சொல்ல தமிழ் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement