தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி.
இதில் நாயகி சந்தியா ஹைலைட் என்றாலும் சீரியலில் படு வில்லியாக இருப்பது அர்ச்சனா என்ற வேடம் தான்.தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்.
இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன் சீரியலில் இருந்து திடீரென விலகி இருந்தார்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இவர் ஏன் விலகினார் என்ற தகவல் வெளியாகத நிலையில் தற்போது அது பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இதன் காரணமாகவே அவர் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகி இருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
Listen News!