விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி-2.இத்தொடரில் சந்தியா போலீஸ் அதிகாரியாக களமிறங்கி கலக்கி வருகின்றார்.
அதில் அர்ச்சனா தனக்கு பிறந்த குழந்தையை பக்கத்து வீட்டு பெண்ணிற்கு தெரியாமல் மாற்றி அவரின் குழந்தையை தான் எடுத்து விடுகின்றார்.
இதனால் தன் பிள்ளையை பார்ப்பதற்கு அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.அந்த சமயம் அந்த பிள்ளையை எடுப்பதற்கு முயற்சி செய்யும் போது கடத்தல் காரர்கள் கடத்தி சென்று விடுகிறார்கள்.
இதன் பிறகு சந்தியாவிடம் அழுது புலம்பி அந்த பிள்ளையை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறார் அரச்சனா.ஆனால் சந்தியாவோ “இப்படி நிறைய பிள்ளைகள் கடத்தி சென்று இருக்கிறார்கள். மீட்பது கஸ்டம்..” எனக் கூறியதும் அர்ச்னா நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என தற்கொலைக்கு முயற்சி செய்கின்றார்.உடனே சந்தியா முதல் வீட்டுக்காரர் வரை ஓடிப்போய் காப்பாற்றி விடுகிறார்கள்.
இதன் பிறகு “குழந்தையை பெற்றவங்களே சும்மா இருக்கும் போது நீ ஏன் இப்படி செய்கிறாய் ..” என சந்தியா கேட்கின்றார்.இந்த சமயம் அது தன்னுடைய குழந்தை தான் என்ற விடயத்தை ஒப்புக்கொள்வாரா சந்தியா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேணடும்.
Listen News!